Pages

Tuesday, July 13, 2010

பாம்பன் சுவாமிகள் இயற்றிய ஷண்முக கவசம்

Part 1
PAMBAN SWAMIKAL IYATRIYATHU. SHANMUGHA KAVACHAM
பாம்பன் சுவாமிகள் இயற்றிய ஷண்முக கவசம்.
தமிழ் இணைய வலைப் பதிவாளர் திருமதி கீதா சாம்பசிவம் எழுதிய இவரது சரித்திரத்தைப் படிக்க இங்கே கிளிக்கவும்.
ஒரு வேண்டுகோள். 
பாடல்களைப் படிக்கத தொடங்கி விடின், இரண்டு பகுதிகளையும் தொடர்ந்து படிக்கவேண்டும்



Part 2


The Shanmuga Kavasam is the works of his Greatness Saiva Sithantha Ganabanu Pamban

Swami Shrimath Kumaraguruthasa Muninthara Peruman.Person or persons reading or singing the Shanmuga Kavasam should be continuous.
It should be read or sung six times in one sitting. The words should be properly pronounced

to derive the full benefits. If anyone is unable to read or sing continuously for six times, it

should be read at least once a day.
Full benefits will be derived if the above mentioned cautions are observed. All kinds of

diseases will be cured, Sins will be forgiven, enemies will be defeated, long life, good and

intelligent children will be born, will get divine powers and also eternal bliss by reading or

singing Shanmuga Kavasam with full faith in it.
The Shanmuga Kavasam is the works of his Greatness Saiva Sithantha Ganabanu Pamban

Swamgali Shrimath Kumaraguruthasa Muninthara Peruman.
www.youtube/vigneswaranra
Courtesy: Vigneshwaranra/youtube

சண்முக கவசம்

ஓம் குமர குருதாச குருப்யோ நம:
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம்

அண்டமா யவனி யாகி யறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற வென்னரு ளீச னான
திண்டிறற் சரவ ணத்தான்றினமுமென் சிரசைக் காக்க

ஆதியாங் கயிலைச் செல்வ னணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் றானிரு நுதலைக் காக்க
சோதியாந் தணிகை யீசன் றுரிசிலா விழியைக் காக்க
நாதனாங் கார்த்தி கேய னாசியை நயந்து காக்க.

இருசெவி களையுஞ் செவ்வே ளியல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பன் முழுதுநற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க.

ஈசனாம் வாகு லேய னெனதுகந் தரத்தைக் காக்க
தேசுறு îதாள்வி லாவுந் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை யீரா றாயுதன் காக்க வென்றன்
ஏசிலா முழுங்கை தன்னை யெழிற்குறிஞ் சிக்கோன் காக்க.

உறுதியாய் முன்கை தன்னை யுமையிள மதலை காக்க
தறுகணே றிடவே யென்கைத் தலத்தைமா முருகன் காக்க
புறங்கையை யயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமான் மருகன் காக்க பின்முது கைச் சேய் காக்க.

ஊணிறை வயிற்றை மஞ்ஞை யூர்தியோன் காக்க வம்புத்
தோணிமிர் சுரேச னுந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ
ஆணியைக் கந்தன் காக்க வறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க
அஞ்சக னமொரி ரண்டு மரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சர ணேச வாசான் றிமிருமுன் றொடையைக் காக்க.

ஏரகத் தேவ னென்றா ளிருமுழங் காலுங் காக்க
சீருடைக் கணைக்கா றன்னைச் சீரலை வாய்த்தே காக்க
நேருடைப் பரடி ரண்டு நிகழ் பரங் கிரியன் காக்க
சீரிய குதிக்கா றன்னைத் திருச்சோலை மலையன் காக்க.

ஐயுறு மலையன் பாதத் தமர் விரலுங் காக்க
பையுறு பழநி நாத பரனகங் காலைக் காக்க
மெய்யுடன் முழுது மாதி விமலசண் முகவன் காக்க
தெய்வநா யகவி சாகன் றினமுமென் னெஞ்சைக் காக்க.

ஒலியெழ வுரத்த சத்தத் தொடுவரு பூதப் ரேதம்
பலிகொளி ராக்க தப்பேய் பலகணத் தெவையா னாலுங்
கிலிகொள வெனைவேல் காக்க கெடுபரர் செய்யுஞ் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடா தயில்வேல் காக்க.

ஓங்கிய சீற்ற மேகொண் டுவனிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்ட மெஃகந் தடிபர சீட்டி யாதி
பாங்குடை யாயு தங்கள் பகைவரென் மேலே யோச்சின்
தீங்குசெய் யாம லென்னைத் திருக்கைவேல் காக்க காக்க.

ஒளவிய முளரூ னுண்போ ரசடர்பே யரக்கர் புல்லர்
தெவ்வர்க கௌவரா னுèலுந் திடமுட னெனைமற் கட்டத்
தவ்வியே வருவாராயிற் சராசர மெலாம்பு ரக்குங்
கவ்வுடைச் சூர சண்டன கையயில் காக்க காக்க.

கடுவிடப் பாந்தள் சிங்கங் கரடிநாய் புலிமா யானை
கொடியகோ ணாய்கு ரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை யெதனா லேனு நானிடர்ப் பட்டி டாமற்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க.

ஙகரமே போற்ற ழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதே ணண்டுக் காலி செய்யனே றாலப் பல்லி
நகமுடை யோந்தி பூரா னளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை யிவையா வெற்கோ ரூறிலா தைவேல் காக்க.

சலத்திலுய் வன்மீ னேறு தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலுஞ் சலத்தி லுந்தா னெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினா னான்வ ருத்தங் கொண்டிடா தவ்வவ் வேளை
பலத்துட னிருந்து காக்க பாவனி கூர்வேல் காக்க.

ஞமலியம் பரியன் கைவே னவக்கிர சுக்கோள் காக்க
சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம்
திமிர்கழல் வாதஞ் சோகை சிரமடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன் னிருபுயன் சயவேல் காக்க.

டமருகத் தடிபோ னைக்குத் தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மங் குடல்வலி யீழை காசம்
நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப்பிர மேக மெல்லாம்
எமையடை யாம லேகுன் றெறிந்தவன் கைவேல் காக்க.

இணக்கமில் லாத பித்த வெரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்குங் குஷ்ட மூலவெண் முளைதீ மந்தஞ்
சணத்திலே கொல்லுஞ் சன்னி சாலமென் றறையு மிந்தப்
பிணிக்குல மெனையா ளாமற் பெருஞ்சத்தி வடிவேல் காக்க.

தவனமா ரோகம் வாதஞ் சயித்திய மரோச கம்மெய்
சுவறவே செய்யு மூலச் சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோயண்டவா தங்கள் சூலை
எவையுமென் னிடத்தெய் தாம லெம்பிரான் றிணிவேல் காக்க.

நமைப்புறு கிரந்தி வீக்க நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை யாகுபஃ றொழுநோய் கக்கல்
இமைக்குமுன் னுறுவ லிப்போ டெழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனு மென்னை யெய்தாம லருள்வேல் காக்க.

பல்லது கடித்து மீசை படபடென் றேது டிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சக் காட்டியே யுருட்டி நோக்கி
எல்லினங் கரிய மேனி யெமபடர் வரினு மென்னை
ஒல்லையிற் றார காரி ஓம்ஐம் ரீம்வேல் காக்க.

மண்ணிலு மரத்தின் மீது மலையிலு நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதுஞ் சாரிசெய்யூர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த விடத்து மென்னை
நண்ணிவந் தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க.

யகரமே போற்சூ லேந்து நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலா மீரா றம்பகன் வேல்பின் காக்க
சகரமோ டாறு மானோன் தன்கைவே னடுவிற் காக்க
சிகரமின் றேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க

ரஞ்சித மொழிதே வானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கிற் றிடமுடன் காக்க வங்கி
விஞ்சிடு தினையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்îதா னிகலுடைக் கரவேல் காக்க.

லகரமே போற்கா ளிங்க னல்லுட னௌ¨ய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
றிகழெனை நிருதி திக்கி னிலைபெறக் காக்க மேற்கில்
இகலயில் காக்க வாயு வினிற்குகன் கதிர்வேல் காக்க.

வடதிடை தன்னி லீசன் மகனருட் டிருவேல் காக்க
விடையுடை யீசன் றிக்கில் வேதபோ தகன்வேல் காக்க
நடக்கையி லிருக்கு ஞான்று நவில்கையி னிமிர்கை யிற்கீழ்க்
கிடக்கையிற் றூங்கு ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க.

இழந்துபோ காத வாழ்வை யீயுமுத் தையனார் கைவேல்
வழங்குநல் லூணுண் போது மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்துநெஞ் சடக்கம் போதுஞ்
செழுங்குணத் îதாடே காக்க திடமுடன் மயிலுங் காக்க.

இளமையில் வாலி பத்தி லேறிடு வயோதி கத்தில்
வளரறு முகச்சி வன்றான் வந்தெனைக் காக்க காக்க
ஒளியெழு காலை முன்னே லோஞ்சிவ சாமி காக்க
தௌ¨நடு பிற்ப கற்கால் சிவகுருநாதன் காக்க.

இறகுடைக் கோழித் îதாகைக் கிறைமுனி ராவிற் காக்க
திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பினி ராவிற் காக்க
நறவிசேர் தாட்சி லம்ப னடுநிசி தன்னிற் காக்க
மறைதொழு குழக னெங்கோன் மாறாது காக்க காக்க.

இனமெனத் தொண்ட ரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க
தனிமையிற் கூட்டந் தன்னிற் சரவண பவனார் காக்க
நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுடான் காக்க வந்தே

சங்கடம் தரும் வழக்கு, சதிகாரர்களின் சழக்கு, வழிச்செலவில் வரும் ஆபத்து இவை களிலிருந்து நமைக் காக்க - சண்முக கவசம் பாராயாணம் செய்து பயன்பெறுவீர் பக்தர்களே!