Pages

Tuesday, April 18, 2017

Subramania Bujangam

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம்
ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
அறிவின்றி யுளமஞ்சி யுயிர்மங்குபோதே
நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
நினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே.
தயவே காட்டும் தன்மை யனே
தங்கக் குகையில் வாழ்பவனே,
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப்
பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுகா, நீ தோன்றுகவே
அசைவு அடங்கி இசைவு ஒடுங்கி
கபம் மிகுந்து வெளியேற
நசைமிகுந்தும் யம பயத்தால்
நடுநடுங்கி உடல் துடிக்க
விசையும் உயிர் விண்ணேக
மெய்விதிர்க்கும் நேரத்தில்
விரைந்து குகன் என் முன்னே
ஒளி தந்து காத்திடவே
உயுர்ந்த தத்துவங்களை தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் குகன் என்னும் பெயரைக் கொண்ட சுப்ரமணிய ஸ்வாமியே ! கருணைக் கடலே ! இந்த உலகில் பிறந்து தேக இந்திரியங்களோடு லயித்துப் போய் இறுதியில் அங்கங்களின் அசைவுகள் ஒடுங்கி,கபம் மிகுந்து நுரை மிகுந்து வெளியேற , மரணத்தின் பயம் வந்து உடல் நடு நடுங்கி எனது ஆத்மா உடலில் இருந்து வெளியேரும் தருணத்தில் எந்த விதமான நினைவோ அறிவோ இல்லாமல் இருக்கும் நிலை வரும்போது,என்னைக் காபாற்ற வேறு துணை யாரும் இல்லாத நிலையில் நான் கிடக்கும் போது முருகா நீ ஓளி பிரவாகமாத் தோன்றி என்னைக் காக்க வேண்டும்.

Courtesy: Ramasamy Chandrasekaran Facebook.