Pages

Sunday, October 30, 2011

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா....கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.



IT WAS MY FORTUNE THAT I GOT THIS BOOK KARTHIKEYAN PAAMALAI PUBLISHED BY
MUMBAI NAGARATHAR PANGUNI UTHIRATH THIRUVIZHA KUZHU, IN 1999 ON THE EVE OF
KANDHAR SHASTI.

WHAT A BEAUTIFUL DEVOTIONAL SONG BY THE GREATEST POET OF TAMIL NADU, KANNADASAN ON LORD MURUGAN !!


மலையினில் அரசமைத்த மன்னன்

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா ..வெறும்
ஆண்டியாகிப் பழனிவந்த வேலய்யா...
கற்பனையைத் தாண்டி நிற்கும் கந்தய்யா .. உனைக்
காண்பதற்கு நடந்துவந்தோம் நாமய்யா.

மலையினிலெ அரசமைத்த ம்ன்னனே எங்கள்
மடியினிலே குழந்தையான கந்தனே
தலைஇருக்கும் வரையிலுன்னை வணங்குவோம்
சன்னிதியில் பாடிபாடி மயங்குவோம்.

காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனம் அங்கு
கந்தனையே எண்ணி வாழ்ந்தனம்
பூவிரித்த பாண்டினாட்டில் வாழ்ந்தனம் உன்
பொன்னடியைக் கண்டுகண்டு மகிழ்ந்தனம்.

ஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்வினிலே மயில்
ஏறிவரும் நீயறிவாய் நேரிலே
மாறிவரும் நாகரீக உலகிலே நாங்கள்
மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே

தண்டபாணி கோவிலின்றி ஊருண்டோ ? உன்னைத்
தண்டனிட்டு வணங்கிடாத பேருண்டோ ?
கொண்டுவிக்கப் போன எங்கள் கொள்கையே உனைக்
கொண்டு வைக்கப் போன கொள்கை யல்லவா !!

செந்திலாளும் பழனியாண்டி முருகவேள் எங்கள்
செட்டி மக்கள் தருமங்காக்க வருகவே
அந்தமிலா அழகுத் தெய்வம் கந்தவேள் உன்
அன்புமக்கள் வாழ்வுகாக்க வருகவே.

ஆண்டுதோறும் ஆண்டுதோறும் வருகிறோம் நீ
ஆண்டு வரும் பழனி நோக்கி வருகிறோம்
வேண்டி வரும் நலங்களெலாம் அருளுவாய் உன்
வீட்டு மக்கள் போல எம்மை ஆளுவாய்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.

இங்கே இருக்கிறது 
கவிஞர் மருதகாசி எழுதிய பாடல் 
கந்தன் புகழ் பாடும் பாடல்.. என்
சிந்தையை கவர்ந்த பாடல் என்
முந்தை வினை களைய ஒரு வழி கண்டேன்.