Pages

Sunday, October 23, 2011

Poonguyil.. A song by Kalki Krishnamoorthy.



D.K.pattammal sings in Raag kapi.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஓர் நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்

பொன்முகம் அதனில் புன்னகை பொங‌
இன்னமுதே என்ன இன்மொழி பகன்றொரு
மின்னலைப் போலே மறைந்தான். ... பூங்குயில் கூவும்

பனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டென்.
தேனிசை வினையில் தீஞ்சுவை கண்டேன்.
தனிமையில் இனிமை கண்டேன். ... பூங்குயில் கூவும்

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்.
வள்ளி மணாளன் என்னை மறவான்.
பேரருளாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தில் மெய் மறந்தேன். ,,, பூங்குயில் கூவும்