Pages

Sunday, June 15, 2014

நீ என் குழந்தையடா, முருகா




நீ என் குழந்தையடா – 
உன்னை மடியேந்துதல் என் உரிமையடா… 
முருகா… (நீ என்) 

 தீச்சுடரில் பிறந்தாய் 
தீங்கனியாய் வளர்ந்தாய் 
மாங்கனியால் பழனி 
மாமலையில் அமர்ந்தாய்!
 (நீ என்) 

 உன் முகம் காண்கையிலே 
உள்ளத்தில் ஒரு நேசம்
 திருமுகம் காண்கையிலே 
தோன்றுது தனிப் பாசம்! 

 திருமகள் மருமகனே
 திருப்புகழ் நாயகனே 
அறுமுகத் திருமகனே 
அருகினில் வா குகனே! (நீ என்) 

 கூவி அழைக்கின்றேன்
 குமரா திரு முருகா! 

தாவி எனை அணைக்க 
தக்ஷணமே வருவாய்! 


 தத்தித் தவழ்ந்து வரும் 
தங்கத் திருப் பாதம் எட்டி
 எனை உதைத்தால் 
கிட்டிடுமே மோக்ஷம்! 
(நீ என்) 

 --கவிநயா படத்துக்கு நன்றி: http://knowledgefruit.blogspot.com/2010/12/story-of-subrahmanya-is-found-in.html Posted by கவிநயா at 6/14/2014 09:58:00 AM