Pages

Sunday, July 3, 2011

Alagan Muruganidam Aasai Vaithen

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் !!


என் எனில், அந்த
அழகெல்லாம் முருகனே ..... !!!

Saturday, June 18, 2011

அழகுமயில் ஏறி


அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் -- நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் -- அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!

பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் -- அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!

அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் -- அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் -- அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!


--கவிநயா
http://muruganarul.blogspot.com

Friday, June 17, 2011

வேல் வந்து வினை தீர்க்க


இந்த அழகான அற்புத பாடலை இயற்றிய சுப்பு வாத்தியார் வலைக்குச் செல்ல இந்த பதிவின் தலைப்பைக் கிளிக்குங்கள்.