கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Friday, May 2, 2014
Thursday, May 1, 2014
Shanmuha Shanmuha
muruga muruga muruga muruga
thirumaal muruga thirumaal muruga
vadivel azhaka vanna mayil vaasa
vanna mayil vaasa vanthu enai aala vaa
vadivel muruga vel vel muruga
vel vel muruga sakthi vel muruga
gnana vel muruga sakthi vel muruga
aiya muruga arahara muruga
arahara muruga siva siva muruga
siva siva muruga jaya siva muruga.
அன்பருக்கு அன்பனான ஐயனே ஷண்முகா
ஆறுபடை வீடுடைய ஆண்டவா ஷண்முகா.
பால் தருவோம் பழம் தருவோம் ஓடி வா ஷண்முகா
பாடிடுவோம் பஜனை செய்வோம் பாங்குடன்வா ஷண்முகா
கால் பிடித்தோம் காத்தருள வா வா ஷண்முகா
வேல் முருகா மால் மருகா சரவணா பவா ஷண்முகா.
பாடி வரும் எங்கள் முன்னே தோன்றிடுவாய் ஷண்முகா
பரமசிவம் பாலகனே பாங்குடனே வா ஷண்முகா
அல்லும் பகலுமே உந்தனையே சிந்தித்தோம்
ஓடு மனம் உந்தனையே நாடச் செய்வாய் ஷண்முகா.
Friday, April 25, 2014
வனத் தோகை மயிலே !!
வனத் தோகை மயிலே !!
உன் மேலமர்ந்த
மால் மருகன் முருகன்
புகழ் பாட
வந்திடுவாய் . என் நெஞ்சில்
நின்றிடுவாய். மயிலே..
ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன்.
ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன்.
ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன்.
ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் ....வனத் தோகை மயிலே !!
வயலுர் விராலிமலை வலம் வந்தேன்.
வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன்.
உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன்
உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?,,,வனத் தோகை மயிலே !!
சூரனை வதைத்திடவே செந்தூர் சென்றானோ ?
ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று அமர்ந்தானோ
வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ?
வேதப்பொருள் சொல்லிடவே வேரகம் நின்றானோ. '.
..வனத் தோகை மயிலே !!
தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க
தாலிச் சரடுடனே பரங்குன்றம் விரைந்தானோ ?
காடு மலை சுற்றியபின் தணிகை மலை அடைந்தானோ
காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ
வனத் தோகை மயிலே !!
கண்டி செல்கையிலே காணும் வழி எல்லாம்
கண்டிரா கொடுமைகள் கண்டு மனம் நொந்தானோ ?
தனக்கென தேசம் இல்லா தமிழருக்கோர் வாழ்வளிக்க
வேலுடனே வந்து அவன் வழி ஒன்று சொல்வானோ ?
வனத் தோகை மயிலே !!
உன் மேலமர்ந்த
மால் மருகன் முருகன்
புகழ் பாட
வந்திடுவாய் . என் நெஞ்சில்
நின்றிடுவாய். மயிலே..
ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன்.
ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன்.
ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன்.
ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் ....வனத் தோகை மயிலே !!
வயலுர் விராலிமலை வலம் வந்தேன்.
வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன்.
உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன்
உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?,,,வனத் தோகை மயிலே !!
சூரனை வதைத்திடவே செந்தூர் சென்றானோ ?
ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று அமர்ந்தானோ
வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ?
வேதப்பொருள் சொல்லிடவே வேரகம் நின்றானோ. '.
..வனத் தோகை மயிலே !!
தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க
தாலிச் சரடுடனே பரங்குன்றம் விரைந்தானோ ?
காடு மலை சுற்றியபின் தணிகை மலை அடைந்தானோ
காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ
வனத் தோகை மயிலே !!
கண்டி செல்கையிலே காணும் வழி எல்லாம்
கண்டிரா கொடுமைகள் கண்டு மனம் நொந்தானோ ?
தனக்கென தேசம் இல்லா தமிழருக்கோர் வாழ்வளிக்க
வேலுடனே வந்து அவன் வழி ஒன்று சொல்வானோ ?
வனத் தோகை மயிலே !!
Friday, April 18, 2014
Monday, April 7, 2014
Subscribe to:
Posts (Atom)


