கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Wednesday, December 25, 2019
Friday, September 27, 2019
Monday, July 15, 2019
pādhi madhi nadhi - Tirupuggazh - Kamavardhini - KJ Yesudas
உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி.
Sunday, December 30, 2018
Saturday, November 24, 2018
Sunday, October 28, 2018
Thursday, April 20, 2017
சுப்ரமண்ய புஜங்கம்
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய 'சுப்ரமண்ய புஜங்கம்'
இருபத்தி இரண்டாவது பாடல்
Courtesy: SRI RAMASAMY CHANDRASEKARAN
FACE BOOK.
அபயம் கிட்டும்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்
प्रणम्यासकृत्पादयोस्ते पतित्वा
प्रसाद्य प्रभो प्रार्थयेऽनेकवारम् ।
न वक्तुं क्षमोऽहं तदानीं कृपाब्धे
न कार्यान्तकाले मनागप्युपेक्षा
प्रसाद्य प्रभो प्रार्थयेऽनेकवारम् ।
न वक्तुं क्षमोऽहं तदानीं कृपाब्धे
न कार्यान्तकाले मनागप्युपेक्षा
ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா
உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே.
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே.
கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.
ஐயா! உன் கால்களிலே
அனுதினமும் நமஸ்கரித்து
மெய்யான பூசையிலே
வேண்டுவது ஏதுமிலை
மெய் வாய் கன் மூக்கு செவி
செயல் ஒடுங்கி போய் விடுங்கால்
மையேனும் பொருட்படுத்தாது
இருந்திட வேண்டாமே !
அனுதினமும் நமஸ்கரித்து
மெய்யான பூசையிலே
வேண்டுவது ஏதுமிலை
மெய் வாய் கன் மூக்கு செவி
செயல் ஒடுங்கி போய் விடுங்கால்
மையேனும் பொருட்படுத்தாது
இருந்திட வேண்டாமே !
என் பிரபுவே ஸ்வமினாதா ! பலதடவைகள் பக்தியுடன் நீ மகிழும் வண்ணம் உனக்கு பூஜைகள் செய்து உனது பாத கமலங்களில் வணங்கியிருக்கிறேன். ஆகையால் உன்னிடம் உரிமையோடு ஒரு பிரார்த்தனையை வைக்கிறேன்." கருணைக் கடலான ஸ்கந்த மூர்த்தியே என்னுடைய அந்திம காலத்தில் நான் வாய் திறந்து பேசக்கூட சக்தியில்லாத நிலைக்குச் சென்று விடுவேன். அப்பொழுது என்னைக் கொஞ்சமும் அலட்சியம் செய்துவிட வேன்டாம்" என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் இப்போதே
Subscribe to:
Posts (Atom)